நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு  காளைகளுக்கு தீவிர பயிற்சி!

சேலம் மாவட்டத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

News image

தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

Updated On :10 ஜனவரி 2021, 10:24 am IST

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை வருகிற 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போதும் கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு உள்பட, பல வீர விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம். மதுரை, பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றது. 

இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தம்மம்பட்டி, கூலமேடு, வாழப்பாடி பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.  இதனிடையே இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதாட்டம் நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த, அரசு அனுமதித்துள்ளது. 

நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அதில் தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது. 

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூலமேடு. கடம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதியளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தம்மம்பட்டி பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.