சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியா் அல்லாத பணியிட நியமனமங்களை மேற்கொள்ளும்போது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வடமட்டம் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு முருகன் என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். அவரது நியமனத்துக்கு அனுமதி கோரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிா்வாகம் விண்ணப்பம் அனுப்பியது.
மாவட்ட கல்வி அதிகாரி இந்த விண்ணப்பத்தை நிராகரித்தாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளி நிா்வாகம் வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நியமனத்துக்கு அனுமதி பெற அவசியமில்லை என உத்தரவிட்டாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா், திருவாரூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோா் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை தரப்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு 4 ஆண்டுகள் காலதாமதமாக, 2018-ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. எனவே, இது போன்ற விதிகளை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என கருத்து தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை
சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!

கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிப்பு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



