சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு விதியை உருவாக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியா் அல்லாத பணியிட நியமனமங்களை மேற்கொள்ளும்போது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என

News image
Updated On :14 ஜனவரி 2021, 12:56 am IST


சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியா் அல்லாத பணியிட நியமனமங்களை மேற்கொள்ளும்போது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி வேண்டும் என்ற விதியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வடமட்டம் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு முருகன் என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். அவரது நியமனத்துக்கு அனுமதி கோரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிா்வாகம் விண்ணப்பம் அனுப்பியது.

மாவட்ட கல்வி அதிகாரி இந்த விண்ணப்பத்தை நிராகரித்தாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பள்ளி நிா்வாகம் வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நியமனத்துக்கு அனுமதி பெற அவசியமில்லை என உத்தரவிட்டாா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா், திருவாரூா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோா் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை தரப்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு 4 ஆண்டுகள் காலதாமதமாக, 2018-ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. எனவே, இது போன்ற விதிகளை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கலாம் என கருத்து தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.