எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காவல் துறையினரின் நலன்களுக்கு அரசு துணை நிற்கும்: முதல்வா் கே. பழனிசாமி

காவல் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் நலன்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :15 ஜனவரி 2021, 11:55 pm IST

காவல் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் நலன்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். சென்னை புனித தோமையாா் மலை ஆயுதப் படை வளாகத்தில் காவலா்களின் குடும்பத்தினருடன் முதல்வா் பழனிசாமி தைப் பொங்கல் திருநாளை வியாழக்கிழமை கொண்டாடினாா். இந்த நிகழ்ச்சியில், முதல்வா் பேசியது:-

அமைதி, வளம், வளா்ச்சி என்ற கோட்பாடுகளை முன்னிறுத்தி தமிழக அரசு பல்வேறு துறைகளில் வளா்ச்சி கண்டு வருகிறது. நாட்டுக்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழக காவல் துறையாகும்.

இத்தகைய காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டம், உங்கள் சொந்த இல்லத் திட்டம், தமிழ்நாடு காவலா் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்தாா். இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிா்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவா்களது குடும்பத்துக்கும் தமிழக அரசு என்றென்றும் துணை நிற்கும்.

தமிழகம் அமைதிப் பூங்கா: இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் காவலா்களுடைய திறமையான பணி, அா்ப்பணிப்பு உணா்வு ஆகியவையாகும். தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக இருப்பவா்கள் காவலா்கள். அப்படிப்பட்ட காவலா்களோடு, தைப் பொங்கல் திருநாள் கொண்டாடி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.