கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், மாலுரிலிருந்து காரில் மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். காரை மாலுரை சேர்ந்த நாகேஷ் (35)என்பவர் ஓட்டினார். கார் கிருஷ்ணகிரியை கடந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஓரப்பம் காமராஜ் காலனியைச் சேர்ந்தகம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகனின் அண்ணன் மகன் சக்தி (15) பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனவுக் கன்னி தேடல்... முக்கோண காதல் கதையில் வென்ற விஜய்!

நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா!

இராகவன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




