5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். 

News image
Updated On :15 ஜனவரி 2021, 11:28 am IST


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம், மாலுரிலிருந்து காரில் மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். காரை மாலுரை சேர்ந்த நாகேஷ் (35)என்பவர் ஓட்டினார். கார் கிருஷ்ணகிரியை கடந்து, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற  ஓரப்பம் காமராஜ் காலனியைச் சேர்ந்தகம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த முருகனின் அண்ணன் மகன் சக்தி (15) பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி  உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.