எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த தனியார் பள்ளி 2 பேருந்து தீயில் கருகியது

 காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த  தனியார் பள்ளி 2 மாணவர் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீயியில் கருகியது.

News image
காரைக்காலில் தீப்பற்றி எரியும் தனியார் பள்ளி மாணவர் பேருந்து
Updated On :4 ஏப்ரல் 2021, 7:51 am

DIN

காரைக்கால்:  காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த  தனியார் பள்ளி 2 மாணவர் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீயியில் கருகியது.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ரூ.1 கட்டணத்தில் பேருந்துகள் இயக்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தின்போது பள்ளிகள் மூடப்பட்டதால் தனியாரால் நிர்வகிக்கப்படும் இப்பேருந்துகளுக்கு வாய்ப்பில்லாமல், ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டபோது, இப்பேருந்துகளை இயக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்தபோதும் இதற்கான அனுமதி கிடைக்காததால் பேருந்துகள் வேறு பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஒரு திடலில்  3 மாணவர் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை 12 மணியளவில் ஒரு பேருந்தின் உள்புறத்தில் தீப்பிடித்தது.  இதுகுறித்து அந்த பகுதியினர் காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மற்றொரு பேருந்திலும் தீ பரவியது.

தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 வாகனங்கள் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 2 பேருந்தின் உள்புற இருக்கைகள் முழுவதும் கருகியது. மற்றொரு பேருந்தில் தீ பரவாமல் பாதுகாக்கப்பட்டது.

இதுகுறித்து புகாரின்பேரில், மர்ம நபர்கள் யாரேனும் பேருந்துக்கு தீ வைத்தனரா அல்லது வேறு காரணமா என காரைக்கால் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.