எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கப்பட்டன.

News image
காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
Updated On :5 ஏப்ரல் 2021, 12:20 pm

DIN

காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கப்பட்டன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா  முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் திங்கள்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்குக் கொண்டு  செல்லப்பட்டன. இவை அனைத்து சாவடிகளுக்கும் சென்றடைந்துவிட்டதா என்பதை  உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Story image

மாவட்ட தேர்தல் தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,  

மாவட்டத்தில் 234 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர் நியமனம், கண்காணிப்பு கேமரா பொருத்தல், ஆயுதம் ஏந்திய மத்தியப் படையினர் கூடுதலாக நியமனம் எனச் செய்யப்பட்டுள்ளது. தவிர, பிற வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 வாக்குச் சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, பந்தல் வசதிகள் மற்றும் சாய்வு தளம் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப் பதிவு நேரமாகும். வாக்காளர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து காரைக்கால் 100 சதம் பதிவு என்பதை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.

இயந்திரம் அனுப்பிவைப்பு நிகழ்வில் மாவட்ட  துணை தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எம்.ஆதர்ஷ், எஸ்.சுபாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.