ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

6 மணிக்கு மேல் பொதுமக்களும் வாக்களிக்கலாம்: சாஹு

வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

News image
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)
Updated On :6 ஏப்ரல் 2021, 1:00 pm

DIN

வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என்றும், அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு பேசியதாவது, சாதாரண மக்கள் வாக்களித்த பின்னர் கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். பொதுமக்கள் வாக்களிக்க முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் டோக்கன் பெற்று 6 மணிக்கு மேலும் வாக்களிக்கலாம். அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.