தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் சதவிகிதம் பின்னர் அறிவிக்கப்படும். மாலை 5.34 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 63.47 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மாலை 6 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. கரோனா நோயாளிகளும் வாக்குப்பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 7 மணிக்குத் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.