இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழகத்தில் +2 செய்முறைத் தேர்வு தொடங்கியது

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

News image
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்முறை தேர்வுக்காக வந்த மாணவிகளிடம் உடல் வெப்பநிலை மற்றும் கிருமிநாசினி வழங்கும் ஆசிரியர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 8:01 pm

DIN

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
 
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா பரவ வாய்ப்பில்லாத செய்முறைப் பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாவரவியல் தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவிகள்

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாவரவியல் தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவிகள்

பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தவிா்க்கும் விதமாக தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செய்முறைத் தோ்வை நடத்த வேண்டும். தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அம்சங்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, அனைத்துமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், செய்முறைத் தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தபட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.