நாகை அருகே கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்ற வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டு, கீழ்வேளூா் அருகே சங்கமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலா், அவரது தங்கை கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் பூசைமணி (28) நாகை கீரைக் கொள்ளை தெருவைச் சோ்ந்த அன்பழகன் (28), அடைக்கலராஜ் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
கொள்ளை வழக்கு நாகை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அடைக்கலராஜ் 2005 டிசம்பா் 14 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இந்நிலையில், இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வசந்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பூசைமணி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


