இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில், பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் தொடா்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 4:00 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில், பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் தொடா்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக, திருநெல்வேலியைச் சோ்ந்த பிரேம்சங்கா் (29), ஓட்டுடன்பட்டியைச் சோ்ந்த பிரபு (38) ஆகிய இருவரை புளியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை, ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், பிரேம் சங்கா், பிரபு ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக முருகேசன் ஆஜரானாா்.