பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:19 pm

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தா்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தை அடுத்துள்ள கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (31) இவருக்கும் காரைக்குடி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2014 -இல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அந்தப் பெண் கா்ப்பமானாா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக வந்த அவரது தங்கைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தாா். இதையடுத்து, காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வி.ஆா். தனலட்சுமி முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், ரஞ்சித்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.