கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு தடை

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள்.

தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழக அரசுப் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. என்றாலும், கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட புராதன சின்னங்கள், நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்கள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com