ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மறைவு: மௌன அஞ்சலி அனுசரிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மறைவுவையொட்டி ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் மௌன அஞ்சலி அனுசரித்தனர்.

News image
வட்டார வளர்ச்சி அலுவலர் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பணியாளர்கள்.
Updated On :22 ஏப்ரல் 2021, 8:06 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவிற்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் வியாழக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ப.வாசுதேவன்(50). வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி)  கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார்.

புதன்கிழமை இவருக்கு எதிர்பாராத விதமாக  ஏற்பட்ட மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அனைத்து தரப்பு பணியாளர்களிடம், மென்மையாக பழகும் தன்மை கொண்ட வாசுதேவன் திடீரென மரணம் அடைந்தது ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது மறைவிற்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள் ஒருங்கிணைந்து வியாழக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை பணியாளர்களுக்கும், பல்வேறு சலுகைகளை பெற்றுத் தர, தன்னலம் பாராமல் உழைத்த வட்டார வளர்ச்சி அலுவலர் ப.வாசுதேவன் மறைவு, இவரது குடும்பத்தினர் மட்டுமின்றி,  சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கும் பெரிழப்பை ஏற்படுத்தி உள்ளதென, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகி ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர்  தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.