கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மாநகர காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி

Updated On :24 ஏப்ரல் 2021, 9:16 am

DIN

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மாநகர காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமையைக் காவலராக பணியாற்று வந்த மகாராஜன், கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

அதேபோல் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் முருகேசன், காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உளவுத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று திடீரென உயிரிழந்தார். 

ஒரேநாளில் மூன்று காவலர்கள் உயிரிழந்தது காவல்துறையினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.