தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பொதுமுடக்கம்: தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

தேனியில் கரோனா பரவல் தடுப்பு முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

News image

தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

Updated On :25 ஏப்ரல் 2021, 9:12 am

DIN

தேனியில் கரோனா பரவல் தடுப்பு முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்.20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேனியில் வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

திருமண முகூர்த்த நாளை முன்னிட்டு காலையில் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வோரின் வாகனங்களை காவலர்கள் அனுமதித்தனர். மருத்துக்கடை மற்றும் அத்தியவாசிய வேலைகளுக்கு வாகனங்களில் செல்வோர் விசாரணைக்குப் பின்பு அனுமதிக்கப்பட்டனர். அவசியத் தேவைகளின்றி வாகனங்களில் செல்வோரை காவலர்கள் எச்சரித்து திரும்ப அனுப்பினர். மாவட்டம் முழுவதும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில் காவல் துறை சார்பில் 147 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.