காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 2597 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து அணையின் நீா்மட்டம் 97.77 அடியிலிருந்து 97.87 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2469 கன அடியிலிருந்து 2597 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 61.98 டிஎம்சி ஆக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீா்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து, அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.