அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தேனி அருகே பூத்தது நீலக் குறிஞ்சிப் பூ: மக்கள் மகிழ்ச்சி

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சிப்பூ தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் சாத்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து மலைப்பகுதிகளில் பூத்துள்ளது

News image

இடுக்கி மாவட்டம் சாத்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து மலைப்பகுதிகளில் பூத்துள்ள நீல குறிஞ்சிப்பூ.

Updated On :3 ஆகஸ்ட் 2021, 5:25 pm IST

கம்பம்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சிப்பூ தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் சாத்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து மலைப்பகுதிகளில் பூத்துள்ளது. பொதுமக்கள் இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை கிராமப் பஞ்சாயத்து பகுதியில் சோழா தேசிய பூங்கா உள்ளது. இங்கு கிழக்கத்தி மலா என்றழைக்கப்படும் மலையில் 10 ஹெக்டேர் நிலப் பரப்பளவில் வனப்பகுதியில் நீல குறிஞ்சிப் பூ பூத்துள்ளது.

இந்தப் பூ 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ உலக அளவில் 450 வகை பூக்கள் உள்ளது. இந்தியாவில் மட்டும் 146 வகையான குறிஞ்சிப் பூக்களின் கேரள மாநிலத்தில் மட்டும் 43 வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ட்ரோபிளன்தீஸ் குந்தியானா என தாவர வகை பெயர் கொண்ட இந்த பூ உள்ளூரில் நீல குறிஞ்சி பூ என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மூணாறு ஆனைமலை தொடரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நீல குறிஞ்சி பூ பூத்தது,  இந்த பூக்களை பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

மூணாறு இரவிகுளம் தேசியப் பூங்காவின்  உதவிக் காப்பாளர் ஜெ. நெரிம்பரம்பில் கூறும்போது, இரவிகுளம் தேசிய பூங்காவில் நீலக் குறிஞ்சி பூ பூத்திருப்பது பார்க்க ரம்யமாக, பிரம்மாண்டமாக உள்ளது.

அடுத்த முறை பூப்பதற்காக இதன் விதைகள் காற்றில் பறந்து தேசியப் பூங்காவின் மற்ற பகுதியிலும் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இதன் பரப்பளவு கூடும்.

குறிப்பாக நீலக் குறிஞ்சி பூ மேற்கு மலைத்தொடரில் இடுக்கி மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் மட்டும் பூத்திருப்பது மிகவும் அரிய வகை ஆகும், சுற்றுலாப் பயணிகள் வர தடை உள்ளதால் பார்வையாளர்கள் இல்லை, உள்ளூர் மக்கள் ரசித்து செல்கின்றனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.