தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால்

Updated On :3 ஆகஸ்ட் 2021, 5:08 pm IST

கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சில மாநிலங்களில் நோய்த் தொற்றின் பரவல் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லவ் அகர்வால் கூறியது:

உலகளவில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. அதேபோல, இந்தியாவிலும் கரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை. நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் 47.5 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதில், கேரளத்தை சேர்ந்த 10 மாவட்டங்கள் அடங்கும்.

மேலும், கடந்த ஜூன் 1-ல் 279 மாவட்டங்களில் 100க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், தற்போது 57 மாவட்டங்களில் மட்டுமே பதிவாகின்றன. 222 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. கேரளம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 44 மாவட்டங்களில் கரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

சில மாநிலங்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு 4.88 கோடி, மகாராஷ்டிரத்திற்கு 4.5 கோடி மற்றும் குஜராத்திற்கு 3.4 கோடி தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.