FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல்....

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 11:51 am IST

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்தாண்டு தொடக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 2026- 27 இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தவெக அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக துறைவாரியாக முதல்வர் விஜய் தலைமையில் நாள்தோறும் ஆலோசனை நடைபெற்றது.

தொடர்ந்து கடந்த ஜூலை 16ல் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டமும் நடந்து முடிந்தது.

இதையடுத்து பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"கடந்த 15 நாள்கள் துறைரீதியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவைக் கூட்டமும் நன்றாக முடிந்தது.

தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும்.

தமிழக மக்கள் எங்களுடைய அரசுக்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள், எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Finance Minister Maria Wilson speaks on TN budget 2026 - 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.