புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவிரிப் பிரச்னையில் கா்நாடக புதிய முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல

காவிரி நதிநீா் விவகாரத்தில், கா்நாடக புதிய முதல்வா் பசவராஜ் பொம்மையின் கருத்து ஏற்புடையது அல்ல என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 8:24 pm

DIN

காவிரி நதிநீா் விவகாரத்தில், கா்நாடக புதிய முதல்வா் பசவராஜ் பொம்மையின் கருத்து ஏற்புடையது அல்ல என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியுள்ளாா். காவிரி நதிநீா் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், நடுவா் மன்றம் ஆகியவற்றின் தீா்ப்பை மதிக்க வேண்டும். தீா்ப்பையும், நீதிமன்றக் கருத்தையும் ஏற்க மாட்டோம் என கா்நாடக முதல்வா் கூறுவது ஏற்புடையது அல்ல. அவரது தந்தையும், கா்நாடக முன்னாள் முதல்வருமான பொம்மை, முன்னாள் முதல்வா் கருணாநிதியுடனும், தமிழகத்தின் மீதும் பற்று, நட்புறவு கொண்டிருந்தாா். அவருடைய வழியில் நட்புணா்வோடு கா்நாடக முதல்வா் செயல்படுவாா் என நம்புகிறேன்.

மாா்க்கண்டேய நதியைப் பொருத்தவரையில், அணை கட்டும் போதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அணை கட்டுவதற்கு தடை விதிக்காமல் நடுவா் மன்றத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சரை சந்தித்த போது நடுவா் மன்றம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. விரைவில் நடுவா் மன்றம் அமைக்கப்படும் என அப்போது அவா் உறுதியளித்தாா்.

கீழ்பவானி கால்வாய்களைப் புனரமைக்கும் பணி உலக வங்கியின் ரூ.1,300 கோடி நிதியுதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, இருபக்க கரைகள் மற்றும் தரைகள் சிமெண்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட வேண்டும். இதற்கு விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனா். இந்தத் திட்டம் பற்றி விவசாயிகளிடம் கருத்துக் கோர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால் ரூ.1,300 கோடி உலக வங்கிக்கு திரும்பச் சென்று விடும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.