இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள்

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில்  மீன்வளத்துறை சார்பில் ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

News image
மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள்
Updated On :4 ஆகஸ்ட் 2021, 9:35 am

DIN


மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில்  மீன்வளத்துறை சார்பில் ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 46.20 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை  கருவூட்டல் முறையில்  மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  

மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மேட்டூர் நீர்த்தேக்கத்தில் விடப்படும். நடப்பாண்டில் முதல்கட்டமாக இன்று மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. முதல் ரக ரோகு மீன் குஞ்சுகள் விரலிகளாக மேட்டூர் நீர் தேக்கத்தில் 1 லட்சம் குஞ்சுகள் விடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டலம் மீன்வளத் துணை இயக்குனர் சுப்பிரமணியன், மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் எம்.எல்.ஏ,சதாசிவம், மேட்டூர்  நகர செயலாளர் காசி விஸ்வநாதன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜா மீன்வள துறை சார் ஆய்வாளர்கள் கவிதா, வேலுச்சாமி மற்றும்  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.