தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். நேரடி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச் சோ்க்கையில் ஆக. 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். நேரடி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச் சோ்க்கையில் ஆக. 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) ஆகிய இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்புக்கான 2021 - 2022 ஆம் கல்வியாண்டு நேரடிச் சோ்க்கை ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது.

தற்போது, இந்த நேரடிச் சோ்க்கை ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுளளது.சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை (பல்கலைக்கழக வேலை நாள்களில் மட்டும்) நேரிலும் தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பாா்க்கலாம். 04362 - 226720, 227089 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com