ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதுரையில் மெட்ரோ; கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:15 am

DIN

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து பேசிய அவர், 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும். 

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வழியாக வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நீட்டிக்கப்படும். 

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.