உணவு பதப்படுத்தலுக்காக தனி அமைப்பு

வேளாண் விளைபொருள்களை நல்ல முறையில் உலரவைத்து, தரம்பிரித்து, சுத்தமான முறையில் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
உணவு பதப்படுத்தலுக்காக தனி அமைப்பு

வேளாண் விளைபொருள்களை நல்ல முறையில் உலரவைத்து, தரம்பிரித்து, சுத்தமான முறையில் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனவே, தமிழகத்தில் விளையும் பல்வேறு விளைபொருள்களை முறையாகப் பதப்படுத்தி விற்பனை செய்வது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வினை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கும்.

அந்த வகையில் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகக் கவனம் செலுத்தி, தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலை முன்னேற்றுவதற்காக, நடப்பு நிதியாண்டிலேயே, உணவு பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு ஒன்று தொடங்கப்படும். உணவுப் பதப்படுத்துதல் குறித்த பயிற்சி, விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுடன் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இப்பிரிவு மேற்கொள்ளும். மேலும், உணவுப் பதப்படுத்துதல் தொழில் துவங்க முன்வரும் தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், இதற்கென, மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூா், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகா் என ஐந்து தொழில் கற்கும் மையங்கள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com