கொடநாடு விவகாரம்: பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

கொடநாடு விவகாரம் குறித்து பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
கொடநாடு விவகாரம்: பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
Published on
Updated on
1 min read

கொடநாடு விவகாரம் குறித்து பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர். 

இந்த விவகாரம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று எதிரொலித்துள்ளது. கொடநாடு விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அமளி ஏற்பட்டதால், பேரவையிலிருந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெளியேறி, கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com