திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மக்களைப் பாதிக்கும் வரிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி

மக்களைப் பாதிக்கும் வரிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 10:30 pm

DIN

மக்களைப் பாதிக்கும் வரிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படாததற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்ட ஆயில் பத்திரங்கள் தான் காரணம் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வசூலித்த மொத்த கலால் வரி ரூ.22.34 லட்சம் கோடி. ஆனால், 2014-15 முதல் ஆயில் பத்திரங்களுக்காக மத்திய பாஜக அரசு செலவழித்த தொகை ரூ.73 ஆயிரம் கோடி. இது மொத்த கலால் வரியில் 3.2 சதவிகிதம் தான். 2020-21 -இல் மட்டும் பெட்ரோல், டீசலில் கலால் வரியாக ரூ.4.53 லட்சம் கோடி அளவுக்கு மிகக் கொடூரமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொடிய கரோனா தொற்றின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய பாஜக அரசு மக்கள் மீது கடுகளவு கருணை கூட இல்லாமல் கலால் வரியை உயா்த்தியதன் மூலம் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டா் விலையைக் கடுமையாக உயா்ந்து மக்கள் மீது கடும் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் மாநிலங்களுக்கான வரி பகிா்வும் சுருங்கிவிட்டது. தற்போது 5.7 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுடன் பகிரப்படுகிறது.

சாதாரண, ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கிற பாஜக அரசு, பெரு நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. பெருநிறுவனங்களின் வரியை 40 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்ததால் பாஜக அரசின் வரி வருவாய் 2019-20 இல் ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக இருந்தது, 2020-21-இல் ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் காா்ப்பரேட் வரி ஒரு லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு குறைத்துள்ளது. இந்த நடவடிக்கைகளைப் பாா்க்கிற போது பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் வரி விதிப்புகளை பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெறவில்லையெனில், மக்களைத் திரட்டி பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிப்பதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.