இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

செப்.1-இல் பள்ளிகள் திறப்பது உறுதி: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் 1ஆம் தேதி முதல்வர் அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக

News image
செப்.1-இல் பள்ளிகள் திறப்பது உறுதி: அன்பில் பொய்யாமொழி
Updated On :28 ஜனவரி 2024, 3:58 am

DIN

திருச்சி: செப்டம்பர் 1ஆம் தேதி முதல்வர் அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது: தமிழக முதல்வர் அறிவித்தபடி செப்.1ஆம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்காக, பொது சுகாதாரத்துறை அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கிருமிநாசினி மருந்து தெளித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்படும். 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் பங்கேற்பர். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலாக உள்ள இடங்களில் இருந்து தேவையான இடங்களுக்கு ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் அறிவுரையின்படி காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். இதுதொடர்பாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.