கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை?

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டது பற்றி...

News image

அமீர் நசீர்சாதே

Photo: X

Updated On :28 பிப்ரவரி 2026, 6:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூரும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தியது.

ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதேவும், புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஈரானிய ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியாக நசீர்சாதே பதவி வகித்து வந்தார்.

கடந்தாண்டு இஸ்ரேல் தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதை தொடர்ந்து, முகமது பாக்பூர் தளபதியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.