விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தம்மம்பட்டி: புலிக்கரடு அடிவாரத்தில் வரட்டாற்றில் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

தம்மம்பட்டி அருகே புலிக்கரடு அடிவாரத்தில் பாயும் வரட்டாற்றில்  பாலம் கட்ட தமிழக அரசு 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால்

News image

புலிக்கரடு பகுதி பாலம் கட்டப்பட உள்ள வரட்டாறு

Updated On :23 ஆகஸ்ட் 2021, 9:12 am

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே புலிக்கரடு அடிவாரத்தில் பாயும் வரட்டாற்றில்  பாலம் கட்ட தமிழக அரசு 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் பொதுமக்களின் 40 ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது என்று ஜங்கமசமுத்திரம் ஊராட்சித்தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தம்மம்பட்டி அருகே உள்ளது ஜங்கமசமுத்திரம் ஊராட்சி. கொல்லிமலை அடிவார ஊராட்சியாக உள்ளது. கொல்லிமலை சாரலில் இருந்து உற்பத்தியாகும் வரட்டாறு, புலிக்கரடு வழியாக பாய்ந்தோடி தம்மம்பட்டியிலுள்ள சுவேத நதியில் கலக்கிறது. புலிக்கரடு சாலை வழியாக  கொல்லிமலையின் அனைத்து ஊர்களிலிருந்து மலைவாழ்மக்கள் தங்கள் விளைபொருள்களை தம்மம்பட்டிக்கு கொண்டுவருவது வழக்கம்.

பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வழியேதான் தம்மம்பட்டி பகுதிகளுக்கு தங்களது உயர்கல்வி பயில வந்துச் செல்லவேண்டும். ஆனால் மழைக்காலங்களில், இந்த வரட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, மலைவாழ்மக்கள், இவ்வழியே தங்கள் விளைபொருள்களை எடுத்துச்செல்ல இயலாமல், சுமார் 10 கி.மீ.தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

அதில் பள்ளி மாணவ, மாணவிகளும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். அதனையடுத்து வரட்டாற்றில் பாலம் கட்டக்கோரி கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள், முதியோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுபற்றி ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவர் அ.பெரியசாமி கூறியதாவது, இப்பகுதி மக்களின் 40 ஆண்டுக் கோரிக்கையையடுத்து, புலிக்கரடு அடிவாரம், வரட்டாற்றில் பாலம் கட்ட தமிழக அரசு நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

அதற்காக, உயர்அதிகாரிகள் பாலம் கட்டுவதற்கான  வரைவு திட்டம் தயாரித்தல், நேரில் ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்யத்தொடங்கியுள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.