விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பத்தில் போலி பீடி விற்பனை: இளைஞர் கைது; ரூ.1.67 லட்சம் பண்டல்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பத்தில் போலி பீடி பண்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை தெற்கு காவல்துறையினர் கைது செய்து ரூபாய் 1.67 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

News image
கம்பத்தில் போலி பீடி விற்பனை: இளைஞர் கைது; ரூ.1.67 லட்சம் பண்டல்கள் பறிமுதல்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 5:30 am

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் போலி பீடி பண்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை தெற்கு காவல்துறையினர் கைது செய்து ரூபாய் 1.67 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரபலமான பீடி நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக  பீடி  கம்பெனி நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேனி ஒயிட் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த செய்யது பீடி நிறுவன மேலாளர் அற்புதனந்தா கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது கம்பம் கே.வி.ஆர். தெருவில் உள்ள நாகூர்கனி என்பவரது வீட்டில் போலி பீடிகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த பீடி பண்டல்களை சோதனை செய்தபோது, மலபார், 5 பூ மார்க், கணேஷ், போட்டோ நிறுவனங்களின் பெயரில் ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள்  வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி பீடி நிறுவன மேலாளர் அற்புதனந்தா கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா வழக்கு பதிவு செய்து, இளைஞர்  நாகூர் கனியை திங்கள்கிழமை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பீடி பண்டல்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.