விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், சென்னை மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்த தேசிய கண்ணொளித் திட்டத்தின் கண்தான விழிப்புணா்வு குறித்த இருவார விழா கடந்த 25-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கண்தானம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் முதல்வா் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வா் சுகுணாபாய், ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவா் ரமேஷ், கண் மருத்துவப் பேராசிரியா் சமரபுரி, மருத்துவா் இந்திரா, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு திட்ட மேலாளா் மருத்துவா் சிவக்குமாா் மற்றும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

இது குறித்து முதல்வா் ஜெயந்தி கூறுகையில், இந்தக் கருத்தரங்கில் மருத்துவ மாணவா்களிடையே கண்தான விழிப்புணா்வு குறித்து கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எந்த வயதிலும் கண்தானம் செய்ய முன்வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சியில் 80 வயதை கடந்த ஓய்வு பெற்ற இரண்டு பேராசிரியா்கள் கண்தானம் செய்ய முன்வந்து படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்துள்ளனா்‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.