இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேக்கடி ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தேக்கடி ஏரியில் படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் புலிகள் நடமாட்டத்தை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

News image

தேக்கடி ஏரியில் எடப்பாலம் அருகே மரத்தடியில் ஓய்வில் இருக்கும் புலி.

Updated On :29 ஆகஸ்ட் 2021, 9:56 am

கம்பம்: தேக்கடி ஏரியில் படகு சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் புலிகள் நடமாட்டத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள  தேக்கடி ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி தொடங்கியுள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு படகுச்சவாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் எடப்பாலம் விடுதி அருகே புலி ஒன்று படுத்திருப்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர், இரண்டாவது முறையாக 11 மணி படகில் சென்ற சுற்றுலாப் பயணிகள் புலி மற்றும் அதன் குட்டியும் நடந்து சென்றதைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். மூன்றாவதாக 1  மணி படகில் சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றுமொரு புலியைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

இதுபற்றி கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, பொதுவாக படகுச்சவாரி செல்பவர்களுக்கு யானை, காட்டெருமை, மான்கள் போன்றவை கண்ணில் தென்படும். சனிக்கிழமை மூன்று புலிகள், மற்றும் ஒரு குட்டிப்புலி நடமாட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.