மன்னார்குடியில் கி.வீரமணி 89-வது பிறந்த நாள் விழா 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 89 ஆவது பிறந்த நாள் நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திராவிடர் கழகத்தினர்.
மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திராவிடர் கழகத்தினர்.
Updated on
1 min read


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 89 ஆவது பிறந்த நாள் நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மேலராஜ வீதி பெரியார் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி திராவிடர் கழக நகர தலைவர் எஸ்.என்.உத்திராபதி தலைமை வகித்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ,திராவிடர் கழக மாநில விவசாய அணி செயலர் ராயபுரம் இரா. கோபால், தி.க. மாவட்ட செயலர் கோ. கணேசன், நகர செயலர் முராமதாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தி.க.நகர செயலர் கா.செல்வராசு, ஒன்றிய அமைப்பாளர் நா.இன்பக் கடல், தலைமைக் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கௌதமன் ,நகரத் தலைவர் கோவி .அழகிரி பகுத்தறிவு ஆசிரியர் அணி நகரச் செயலர் ஆர்.கோபால், நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com