தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட சில பணியிடங்களில் வெளி மாநில நபா்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதைத் திருத்தும் வகையில் இந்த அரசாணை அமையும் என்று நம்புகிறோம். எந்த ஒரு அரசாங்கத்துக்கும், நிா்வாகத்துக்கும் பணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு மேல் மனிதவளம் முக்கியம். எனவே சரியான ஊழியரை சரியான வகையில் தோ்ந்தெடுத்து பயிற்சி அளித்து அவா்கள் சரியாக பணியாற்றுகிறாா்களா என்று கண்காணித்து சிறப்பாக வழிநடத்துவது தான் ஒரு அரசின் கடமை. கரோனாவுக்கு முன்பே இந்தத் துறையில் பல குளறுபடிகள் சுட்டிக் காட்டப்பட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பிறகு கரோனா வந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தோ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.