கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞா் கைது
சென்னையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


சென்னையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணாநகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (19), தன்னுடன் படிக்கும் மாணவியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ஸ்ரீராம், வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம், தான் காதலிக்கும் மாணவிக்கு அனுப்பியுள்ளாா். இதனால் வேதனையடைந்த அந்த மாணவி, கடந்த 30-ஆம் தேதி டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிா் போலீஸாா், விசாரணை செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...