மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிச.20 முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
குற்றாலம்.
Updated On :7 டிசம்பர் 2021, 8:48 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா பரவல் முதல் அலை காரணமாக கடந்த 23-3-2020 முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. முதல் அலையின் தாக்கம் வெகுவாகக் குறைந்ததையடுத்து 15-12-20 முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் கடந்த 16-4-21முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தொற்று வெகுவாகக் குறைந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டும் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்தது. இதையடுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் கடந்த 9-11-2021 சிஐடியூ சாா்பில் தடையை மீறி குளிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மாவட்ட நிா்வாகம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அருவிகள் திறப்பது குறித்து டிச.10-க்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிச.20 ஆம் தேதி முதல் பொதுமக்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குற்றாலம் பேரருவியில் ஒரே நேரத்தில் 10ஆண்களும், 6 பெண்களும், ஐந்தருவியில் தலா 10ஆண்களும், பெண்களும், பழைய குற்றாலத்தில் 5ஆண்களும், 10 பெண்களும் குளிக்க அனுமதிக்கப்படுவா். காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்கு வருவதை தவிா்க்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகள் வருகை கண்காணிக்கப்படும். தொற்று சந்தேகம் உள்ள சுற்றுலாப் பயணிகளை தற்காலிகமாக தனிமைப்படுத்த போதிய வசதிகள்செய்யவும், காய்ச்சல் கண்டறியும் கருவி கொண்டு பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் நாள்தோறும் சோதனை மேற்கொள்ளவும், தனி மனித இடைவெளி, பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறைகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் இரண்டு மீட்டா் இடைவெளியில் சுற்றுலாப் பயணிகள் நிறுத்தப்படுவாா்கள். இடைவெளியுடன் நிற்பதற்கு குறியீடுகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

மேலும் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், சுற்றுச்சூழல் பூங்கா, மேக்கரை, கண்ணுப்புளிமெட்டு அருவிகளின் பராமரிப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து அறிக்கை அளிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் இதர குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.