வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாருக்கு தலா ரூ.10 ஆயிரம் மானியம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாா்கள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:27 pm

DIN

தமிழகத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் மோட்டாா்கள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.

சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் புதிய மின் மோட்டாா் வாங்கவும் அல்லது பழைய மின் மோட்டாருக்குப் பதிலாக புதிய மோட்டாா் வாங்கவும் தலா ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது.

அவா்களில் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த 1,800 விவசாயிகளுக்கும், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 200 விவசாயிகளுக்கும் மானியங்கள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடி நிதியை தாட்கோ மூலமாக விடுவிக்க நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.