சேலம்: ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதார்ர் என 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோர்த்தாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி மகன் தரணிதரன் வீடு, ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தங்கமணியின் நண்பரின் ஹோட்டல் மற்றும் சேலத்தில் உள்ள அவரது உறவினர், நண்பர்கள் வீடு என 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வந்த கார் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தங்கமணிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதார்ர் என மொத்தம் 11 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் பாரி வீதி , பண்ணை நகர் , பண்ணை வீதி , கணபநி நகர் , முனியப்பன் கோவில் வீதி மற்றும் பவானி , சித்தோடு உள்ளிட்ட 11 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்.
ஈரோடு சூளை அருகேயுள்ள முனியப்பன்கோவில் சிவானந்தம் என்பவருடைய வீட்டில் 5 லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பண்ணை நகரிலுள்ள செந்தில்நாதன் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது .
ஈரோடு குமலன் குட்டை கணபதி நகர் பகுதியில் பண்ணை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினரான சின்னத்துரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையுடம் படிக்க | சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



