இதுவரை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள 551 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி திருப்பணிகள் முடிவடைந்தவுடன் குடமுழுக்கு நடத்தப்படும்.
பிரசித்தி பெற்ற திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கவேண்டும், ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது ரூ. 8 கோடி செலவில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கருங்கல் திருப்பணியாக செய்தல், ரூ. 92 லட்சத்தில் இராஜகோபுரத்தின் முன்புறம் கருங்கல் மண்டபம் திருப்பணி, ரூ. 18 லட்சத்தில் இராஜகோபுரம் திருப்பணி, ரூ. 80 லட்சம் செலவில் பரிவார சன்னதிகள், விமானங்கள், பிரகார மண்டபம் திருப்பணி, ரூ. 50 லட்சம் செலவில் பிரகார மண்டபம் அறைகள், மேல்தளத்தில் பழுதடைந்துள்ள தட்டோடுகள் புதுப்பித்தல், ரூ. 40 லட்சம் செலவில் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்திலும், மூன்றாம் பிரகாரத்திலும் மரக்கதவுகள், பாதுகாப்பு தடுப்பு கிரில் அமைத்தல், ரூ. 60 லட்சம் செலவில் மூலவர் சன்னதி விமானம் திருப்பணி, ரூ. 10 லட்சம் செலவில் கருங்கல் சுவர், மேல்தளம் சுத்தம் செய்தல், ரூ. 20 லட்சம் செலவில் திருக்குளம் திருப்பணி, ரூ. 8 கோடி செலவில் திருக்கோயிலுக்கு வடக்கு புறம் பக்தர்கள் ஓய்வு கூடம் மற்றும் தங்கும் விடுதி கட்டுதல், ரூ. 94 லட்சம் செலவில் மேற்கு புறம் தேரோடும் வீதியில் கடைகள் கட்டுதல், ரூ. 1.20 கோடி செலவில் அன்னதான மண்டபம் மேல் தளம் கட்டுதல், ரூ.30 லட்சம் செலவில் பக்தர்களுக்கு முடி காணிக்கை செலுத்த புதிய மண்டபம் அமைத்தல், பெரிய மற்றும் சிறிய இரண்டு திருமண மண்டபங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல், கோசாலை, அன்னதானக் கூடம் விரிவுப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆகமொத்தம் ரூ. 25 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.