மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் கரோனா பரவும் அபாயம் உள்ளது.

News image
அரசின் எந்த  விதி முறைகளையும் பின்பற்றாமல் குற்றாலம் பேரருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகள்.
Updated On :20 டிசம்பர் 2021, 3:38 am

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் கரோனாபரவும் அபாயம் உள்ளது.

கரோனா பரவல் முதல் அலை காரணமாக கடந்த 23-3-2020 அன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. முதல் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்ததையடுத்து 15-12-20 முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் கடந்த 16-4-21முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொற்று வெகுவாக குறைந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டும் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்தது.

இந்நிலையில் டிச.20 முதல் பொதுமக்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதியளித்து  மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டாா்.

திங்கள்கிழமை அதிகாலையில் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அருவி நீரில் மலா்களைத் தூவி வழிபட்டனா்.

Story image

அதனைத் தொடா்ந்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் அருவிகளில் சோப் போட்டு குளித்தும், சமூக இடைவெளிகளைப் பின்பற்றாமல் கூட்டமாக நின்றும், அருவிகளில் திட்டமிட்டபடி சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்காமல் மொத்தமாக குளிக்க அனுமதித்தது, வெப்பமானி  கொண்டு  உடல்பரிசோதனை மேற்கொள்ளாமலும், வரிசையில் நிற்காமலும் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தனா்.

அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டமாக சென்றும், எந்த வித சோதனைகளுமின்றி அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால் மேலும் கரோனா நோய்த்தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.