ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

திருவையாற்றில் ஜன. 18-இல் தியாகராஜ ஆராதனை விழா தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆம் ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image

சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமி

Updated On :22 டிசம்பர் 2021, 11:36 am IST


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175 ஆம் ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற ஸ்ரீ தியாக பிரம்ம சபையின் அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இவ்விழா ஜனவரி 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவை சபைத் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் தொடங்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு மாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ தியாகராஜ பெருமான் சித்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 22 ஆம் தேதி தியாகராஜர் ஆராதனை நடைபெறவுள்ளது. இதில்,காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் வைபவம், இரவு 8 மணிக்கு ஸ்ரீ தியாகராஜர் உருவச் சிலை ஊர்வலம் ஆகியவை நடைபெறவுள்ளன. தேசிய நிகழ்ச்சிகள் ஜனவரி 22 ஆம் தேதி இரவு நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளன.

Story image

திருவையாறு தியாகராஜ ஆசிரமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்ச்சி.

ஆண்டுதோறும் இவ்விழாவில் இரண்டாம் நாள் முதல் நிறைவு நாள் வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக பங்கேற்போர் நலன்கருதி அனைத்து நாள்களிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கைக்கு மிகாமலும் பங்கேற்க உள்ளனர் என்றார் சுரேஷ் மூப்பனார்.

அப்போது அறங்காவலர்கள், எஸ். கணேசன், எம்.ஆர். பஞ்சநதம், பொருளாளர் ஆர். கணேஷ், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.