5 ஆண்டுகளுக்கானத் திட்டங்களை 5 மாதங்களில் செய்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்
5 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களை 5 மாதங்களில் செய்துமுடித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.


5 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களை 5 மாதங்களில் செய்துமுடித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள், பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சிதான்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில் 300-க்கும் அதிகமான வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
அனைத்து மதங்களுக்கும் அடைப்படை ஒன்று தான் என்ற அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு.
வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றப்படும். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை 5 மாதங்களில் செய்து காட்டியுள்ளோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...