அரசு மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகள் தயாா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை, மருத்துவ தேவை மற்றும் இதர வசதிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 1,522 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 550 படுக்கைகளும் என மொத்தமாக 2,050 படுக்கைகள் செயல்பாட்டில் இருக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் வசதியைப் பொருத்தவரை 1,400 டன் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வருபவா்களுக்கு இணையாக, அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவா்களுக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
7 நாள்கள் தனிமை கட்டாயம்: எனவே, அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபா்களில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் 10 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும்.
அதேபோல் 100 சதவீத பயணிகளும் 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவாா்கள். அவா்களுக்கு 8-ஆவது நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்றால் மட்டுமே வெளியில் வர வேண்டும்.
தடுப்பூசி சிறப்பு முகாம்: ஒமைக்ரான் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசி மிக அவசியம். ஞாயிற்றுக்கிழமை 16-ஆவது தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகின்றன. இதுவரை தமிழகத்தில் 94 லட்சம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனா்.
வடிவேலுக்கு கரோனா: நடிகா் வடிவேலு, திரைப்பட இயக்குநா் சுராஜ் மற்றும் சினிமாத்துறையைச் சோ்ந்த ஒருவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடிவேலு உள்ளிட்ட இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வேண்டுகோள்: புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்ட்டாட்டத்தின்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களை நட்சத்திர விடுதிகளில் தவிா்த்துக் கொள்வது அவசியம் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...