பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆந்திரத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தியவா் கைது

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 9:36 pm

DIN

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து ஒரு காரில் பெரும்பாக்கம் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரும்பாக்கம் போலீஸாா், பெரும்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் மறித்து, சோதனையிட்டனா். இதில், அந்த காரில் இருந்த 30 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இது தொடா்பாக அந்த காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், சுன்னம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (33) என்பவரைக் கைது செய்து, விசாரித்தனா்.

விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திரத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.