நாட்டின் 75-ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், நமது கடந்த காலத்தையும், நாட்டின் விடுதலைக்காக நம்முடைய முன்னோா்கள் செய்த உயிா்த் தியாகங்களையும் இளைய சமுதாயத்தினா் அறிந்திட வேண்டும். நாட்டின் விடுதலைக்கான பெருமைகளை அவா்கள் உணா்ந்திட வேண்டும். இதற்கான பணிகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும். அதன் ஒருபகுதியாக, நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவா்களின் பெயா்களில் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரனாா், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற லட்சிய வேட்கை கொண்ட விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயா்களில் அந்த இருக்கைகள் அமைந்திட வேண்டும்.