47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அண்ணா நினைவுநாள்: காஞ்சிபுரத்தில் அமைச்சர் பெஞ்சமின் மரியாதை

அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர் பெஞ்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
அண்ணா நினைவுநாள்: காஞ்சிபுரத்தில் அமைச்சர் பெஞ்சமின் மரியாதை
Updated On :3 பிப்ரவரி 2021, 5:54 am

DIN


அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர் பெஞ்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அவரது இல்லத்தில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன், அண்ணா திமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணாவின் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஆர். பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உள்பட அதிகாரிகள் பலரும் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.