நாமக்கல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தொழில்நுட்ப மேலாண் முகமை ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான வேளாண் திருவிழா மற்றும் கண்காட்சி கருத்தரங்கு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார். வேளாண் இணை இயக்குனர் அசோகன், வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த 5 விவசாயிகளுக்கு ஆட்சியர் விருது வழங்கி கெளரவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது: உழவுத் தொழிலானது உன்னதமான தொழில். மருத்துவர், ஆசிரியர், அதிகாரி, அரசியல்வாதி எனப் பல்வேறு பதவிகளை யார் வகித்தாலும் விவசாயிக்கு இணையாக கருத முடியாது. உழவுத் தொழில் மேம்பாடு அடைய அனைவரும் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
வேளாண் கண்காட்சியில் இயற்கை உணவு வகைகள், பயிர் வகைகள், நாட்டுக்கோழி இனங்கள், உணவு வகைகள், இனிப்பு பொருட்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


