டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகையில் பிப்.12-ல் சாலை மறியல்

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகையில் எதிர் வரும் பிப் 12 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

DIN

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகையில் எதிர் வரும் பிப் 12 ஆம் தேதி தமிழக அரசு ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.தமிழ்செழியன் தலைமை வகித்தார்.

வட்ட பொருளாளர் என்.காமராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பார்களாக மாநில துணைத் தலைவர் எஸ்.பிரசாத் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாநில மையத்தின் அறிவுறுத்தலின்படி வருகின்ற பிப்.12ஆம்‌ தேதி தமிழக அரசு ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி நாகப்பட்டினத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும், மாநில  செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாகை மாவட்டத்தின் பதவி உயர்வு கோரி  இணைப்பதிவாளரிடம் வழங்கிய‌ மனு  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாங்கண்ணி நியாய விலைக் கடையில் பணிபுரிந்த இச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எம்.கஜபதி பணி நீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்குவளை வட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய‌ வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக  மாவட்ட நிர்வாகி வீ.பழனிவேலு நன்றியுரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.