தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 493 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,43,209 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,26,504 பேர் குணமடைந்துள்ளனர், 12,396 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 4,309 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் 149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.